முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வார்த்தைகள் புரிந்தபோது...

  - துவாரகன் வீட்டுக்குத் தினமும் வரும் புலுனிகளோடு என் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டேன் எந்தப் பயமுமின்றி அருகே வந்து தத்தித் திரிவன அவை சோற்றுப் பருக்கைகளையும் தானியங்களையும் தங்கள் சுகதுக்கங்களைப் பேசியபடியே கொத்தித் தின்றன பின்னர் விடுவிடுவென பறந்து போயின என் வார்த்தைகளின் அர்த்தத்தை மற்றப் பறவைகளும் புரிந்து கொண்டதில் காற்றில் மிதந்த புழுகம் எனக்கு ஒரு மாலைநேரம் மூஞ்சியை நீட்டிக்கொண்டு ஒரு கூட்டமே படையெடுத்தது அன்பு என்ற ஒற்றைச் சொல் தம்மைப் பயமுறுத்தி விட்டதாம் நான் கொடுத்த தானியங்களை மட்டும் திருப்பித் தந்துவிட்டுப் பறந்தன. 06/2026
சமீபத்திய இடுகைகள்

எதிர்பார்ப்பு

- துவாரகன் உன்னைப் போலவே பேசவும் சிரிக்கவும் பொழுதுபோக்கவும் வேண்டுமென மற்றவரிடமும் நீ எதிர்பார்க்கிறாய் உனது சுகமும் பயணமும் சல்லாபமும் உனக்குச் சொந்தமானவை நீ மாத்திரை எடுக்காது மதுபானம் அருந்தலாம் பணத்தை எண்ணிப் பார்க்காது பயணம் புறப்படலாம் உனக்கு சங்கீதம் கேட்கவும் தலையிடி இல்லாமல் சுகமான நித்திரை கொள்ளவும் வாய்த்திருக்கலாம் தராசின் தட்டுகள் சமமாகும்வரை நிறுப்பவனுக்கு சிரமம் இல்லை இங்கும் தட்டுகள் சமமாக வேண்டுமெனில் கொஞ்சம் சுகம் கொஞ்சம் சங்கீதம் கிள்ளி வைக்கவேண்டும் அவ்வளவுதான்! 06/2026

புதிய வண்ணத்துப்பூச்சி

  - துவாரகன் அது புதிய வண்ணத்துப்பூச்சி அதன் வரவு மகிழ்ச்சியானது தேன் குடிப்பதற்குப் பதிலாக எங்களோடு சேர்ந்து கஞ்சி குடிக்கவும் கூழ் குடிக்கவும் பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடவும் கூடுமென ஆரூடம் கணித்தனர். மிக அரிதான செவ்வாச்சிவகை என்றும் கூறினர். அதன் வருகை கண்டு அம்மம்மா மிக மகிழ்ந்தார். சாமியறையில் நேரமெடுத்து வேண்டுதல்கள் செய்தார். அப்போதுதான் பார்த்தேன். புதிய வண்ணத்துப்பூச்சியும் மற்றையதைப் போலவே எங்கள் வீட்டுச் செவ்வரத்தையில் தேன்குடித்துக் கொண்டிருந்தது. நான் வைத்த கஞ்சியோ பாயாசமோ பிடிக்கவில்லைப்போலும். அது பறக்கும்போது தன் இறகுகளை அடித்துக்கொண்டுதான் பறந்தது. ஓ! இதுவும் வண்ணத்துப்பூச்சிதான். 05/2026 நன்றி : பதிவுகள்

ஓங்கியறைந்த வார்த்தை

  - துவாரகன் முகத்தில் ஓங்கியறைந்த வார்த்தை நீண்ட நேரமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது உவப்பில்லாத அந்த வார்த்தையை மறைப்பதற்காக நேரம் கடத்தும் வித்தையை உடலும் தெரிந்து வைத்திருந்தது யன்னல் மறைப்புக்குக் கட்டிய துணியை அவிழ்த்து மீளவும் கட்டுகிறான் உள்ளேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையை வெளியே வைக்கிறான் மற்றையது உள்ளே மாறுகிறது வெறுமையான தேநீர்க்குடுவை தூக்கிப் பார்த்து நகர்த்துகிறான் தலைவாசல் முன்னிருந்த கால்விரிப்பு தூசு தட்டப்படாமலே நகர்த்தப்படுகிறது யாரோ வாசலில் நீண்ட நேரமாக அழைத்திருக்கிறார்கள் சின்னவன் வந்து கைகளால் தட்டித் திசைகாட்டுகிறான் எவ்வளவுதான் மறந்தாலும் மறைத்தாலும் அது விடுவதாயில்லை. நன்றி : பதிவுகள்

மூளையைத் தோய்த்தல்

  - துவாரகன்   அழுக்கு அகற்றுதல் நன்று உள அழுக்கு அகற்றுதல் அதனிலும் நன்று வழிகள் தெரிந்து வைத்திருந்தோம்   மீதிப் பணியாரத்தோடு பண்பையும் குப்பைக்கூடையில் வீசி விட்டோமே! யார் தருவார் அறிவாசனம்? யாருக்கு யார் சரியாசனம் என்றுதானே தராசுடன் திரிகிறோம்   ஒரு பாதகமும் இல்லை மூளையைத் தனியே கழற்றி எடுத்து சலவை இயந்திரத்தில் தோய்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.    

துவாரகனின் நான்கு கவிதைகள்

  1.   அந்தரத்தில் மிதத்தல் மமதையை, யுகங்களாகச் சுமந்துவந்த காலம் இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. கபடம் நல்ல முகமூடி அதிகாரம் ஒரு சப்பாத்து அதற்குத் தெரிவதெல்லாம் பூச்சிகளும் புற்களும்தான். அதிகார போதையில் வானமும் வசப்படும் சிட்டாய்க்கூடப் பறக்கலாம். பறந்தாலென்ன? அளந்தாலென்ன? நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும். மண் புதைகுழி. தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும். சாம்பல்கூடக் கரைந்துவிடும். எதுவுமில்லை எதுவும். 042024 2.  வேர்கள் மறைந்தே இருக்கட்டும் வேர்கள் எப்போதும்போல் மறைந்தே இருக்கட்டும். மண்ணின் பிடிமானத்தை விட்டு அவை வெளியே வரவேண்டாம். கிளைகளின் களிநடனம் பற்றியும் விருட்சத்தின் வலிமை பற்றியும் அவர்கள் மனங்குளிரப் பேசுவார்கள். தங்கள் வேர்களையும் தேடுவதாகத்தான் கூறுவார்கள். அத்தனையும் பசப்பு வார்த்தைகள். மண்ணும் பெயல்நீரும் பொத்திவைத்த ஆழவோடிய வேர்கள் வெளியே வரவேண்டாம். அவர்களின் குடுவைகளில் இருப்பது உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல. உயிர்வாங்கும் சுடுநீர். 052024 3.  ஒரேயொரு கேள்வி கலகலப்புக் குறையாத கூடு அது. ஒவ்வொரு அறையின் சுவர்மூலைகளும் விளக்குக்கரி ...

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

துவாரகன் அ யற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக… காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு. அன்றிலிருந்து அவரின் துரைத்தனக் கனவு நிறைவேறியது. இனி நினைவில் இருந்த இரண்டுவரிக் கவிதைகூட அவருக்குத் தேவைப்படாது. அவர் துரை. puthu.thinnai.com