துவாரகன் அ யற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக… காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு. அன்றிலிருந்து அவரின் துரைத்தனக் கனவு நிறைவேறியது. இனி நினைவில் இருந்த இரண்டுவரிக் கவிதைகூட அவருக்குத் தேவைப்படாது. அவர் துரை. puthu.thinnai.com
- துவாரகன் பிரமிட்டுக்களுள் பாடம்போட்ட மம்மிகளோடு வாழ்கின்ற கனவுகள் வந்து தொலைக்கின்றன இளந்தென்றற் காற்றில் பசுந்தழைகளோடு தலையாட்டி ஆழவேரோடிய மரத்தின் நம்பிக்கை நினைவுகளில் மட்டும்தானா? பெருமூச்சுக்களிடையே தொலைந்து போகின்றன அழகிய காலங்கள் இற்றுப்போய்விடுமென்று தெரிந்தும் வாழைநாரால் அலங்கரித்த பூச்சாடியை வீட்டு முகப்பில் வைத்திருக்கிறான் பால்யவயதுத் தோழன். 2025/07