முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்




-----துவாரகன்

இப்போ நானும் கொஞ்சம்
குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன்.
யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம்
பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன்.

நந்தவனச் சோலைகளிலும்
பிரசங்க மேடைகளிலும்
திருவிழாக்களிலும்
நான் சேகரித்த குப்பைகளை
சட்டைப் பைகளுக்குள்
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.

அவை என் புத்தகங்களையும்
படிக்கும் அறைகளையும் மீறி
சாமியறைகளிலும் நுழைந்து கொள்கின்றன

கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளை
மூளையிலும் திணித்துக் கொள்கிறேன்.
தம்பி தங்கை அப்பா அம்மாவுக்கும்
இப்போ நான்தான் வழிகாட்டி

என் தாத்தாவின் மடியிலும் கொஞ்சம்
குப்பை கொட்டி
என் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கப் போகிறேன்

நானும் ஒரு புத்திசாலி
என் இளவல்களுக்கு வழிகாட்டி
மூளையில் குப்பை நிரப்பிக் கொண்ட
என் நண்பர்களைப் போலவே.
071120092311

கருத்துகள்

  1. very fine poet. nallakaruthanna kavithai.kuppaikalai thenikkum poothu errkath anne vendum. vathiric. ravi

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    துவாரகன்

    பதிலளிநீக்கு
  3. ezhimaiyana mozhi nadai arumai perumaiyana arivu saarntha vidayangal sekaripathatku kuppaikal poala kotti kidakinrathu avartil oru pangai neengal sekaritha maiyangalai koori irupathum antha arivu saar vidayangal engellam senru serukinrathu enpathai koori irupathum ungal kavikku kalaiyootukinrathu

    பதிலளிநீக்கு
  4. கவிதையை வாசித்து கருத்து எழுதிய ஐங்கரனுக்கு மிக்க நன்றி. அருமை பெருமையான விடங்கள் எங்கும்தான் நிறைந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வழிநடத்தவேண்டியவர்களே திசை மாறும்போது யாரைத்தான் நோவது?

    துவாரகன்

    பதிலளிநீக்கு
  5. துவாரகன் உன்னுடைய கவிதைகளும் ஓவியங்களும் என் மனதில் பதிந்துபோயுள்ளன.

    பதிலளிநீக்கு
  6. வல்லை வெளி வீதியால் நானும் பாஸ்கரன் என்ற நண்பனும் அடிக்கடி பயணம் செய்திருக்கிறோம். உனது முகப்பு படம் அதனை ஞாபகப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் இளையஅப்துல்லாவுக்கு நன்றி. வலைப்பதிவினூடாக தங்கள் தொடர்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஞாபகங்கள் என்றும் அழிக்க முடியாதவையல்லவா?

    அன்புடன்
    துவாரகன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012