டிசம்பர் 04, 2023

களவாடப்பட்ட நினைவுகள்

 

-துவாரகன்
நேற்றைய கனவிலென்
புராதன நகரத்தைக் கண்டேன்.
கதவில்லாத கடைகள்
வேலியில்லாத வளவுகள்
குன்றும் குழிகளுமாகிப்போன வீதிகள்
எல்லாவற்றையும்
மக்கள் தங்கள் கதைகளால்
நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இருட்திட்டுக்கள் எல்லாம்
ஒளியால் வழிந்தன.
பஸ்வண்டி,
புராதன நகரம் என்ற பெயர்ப்பலகையோடு
மிடுக்காக வந்து நின்றது.
ராணியம்மா
தன் வியாபாரத் தளபாடங்களோடு
வந்திறங்கினார்.
ஒரு கொண்டாட்ட மனநிலையை
அவர்களிடம் கண்டேன்.
தாங்கள் நட்டுவைத்த மரங்களை...
நினைவுகளை வளர்த்த வீடுகளை...
ஆரத் தழுவினார்கள்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள்போல்
சில வீடுகள்
தங்கள் முகங்களைத்
தொங்கப் போட்டுக் கொண்டுநின்றன.
என் இளைய சகோதரன் கேட்டான்.
இந்தப் புராதன நகரத்தின்
பெயர் என்னவென்று.
ஈ. தன் பெயரை மறந்ததுபோல்
நினைவுகள் களவாடப்பட்ட
என் புராதன நகரத்தின் பெயரை
வாழ்ந்தவர் வீழ்ந்தவர் நினைவுகளிலும்
மிஞ்சிய எச்சங்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
112023

நவம்பர் 14, 2023

மறைந்திருக்கும் பறவைகள்

 


-துவாரகன்

வரிசை குலையாத அழகு.
காற்றோடு கலந்த சுகந்தம்.
புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை.
பந்தற்கால் அருகே
நிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி.
சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!
எந்தப் பறவையென்று தெரியவில்லை.
கைப்பிடி, இருக்கை, கைப்பை
அத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
மிக இரகசியமாக,
அழுக்கைத் தெளிப்பதற்காகவே
காத்திருக்கின்றன
பறவைகளும்.
மனிதர்கள்போலவே!
18092023

துவாரகனின் இரண்டு கவிதைகள்

1.

அறுவடைக் காலம் 

- துவாரகன் 

விதைக்கும்போது

நல்விதை தேடிவிதை 

என்றார் அப்பு. 


ஒரு பூசணி விதையெனினும் 

முற்றிய நல்விதை 

சாம்பல் சேர்த்து 

அடுப்பு முகட்டில் 

பொட்டலமாய்த் தொங்க விட்டார். 

மதர்த்து பூத்து 

காய்த்துக் குலுங்கின

நல் விதைகள்.


எங்கள் காலத்திலும் 

விதைகள் கிடைத்தன. 

பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்!


அறுவடை செய்கிறோம்

புற்களும் களைகளும்.


2.

நிறைகுடம் 

- துவாரகன் 

அதிகம் பேசாதே 

சிரித்துக் கதைக்காதே

எப்போதும்

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள் 

அறிவாளி. 


மலைமேல் எதுவுமில்லை

எனினும் 

மழை பெய்கிறது

நிறைகுடமாயிரு

புத்திசாலி.


குறைகுடம்கூடத் தளம்பாது 

யாருக்குத் தெரியப்போகிறது

தளம்பாது இரு

நீயும் நிறைகுடம்.

நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ் 

சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்


 

எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும்.

'இப்னு அஸூமத்'தின் சிங்கள மொழிபெயர்ப்பு இங்கே உள்ளது :

தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது :

---------------
මෙම හික් මීයන්හට
පාසැලක් ද නොමැත
ගුරුවරුන් ද නොමැත
ඔවුන් දන්නා දේ
කරවල සුවඳ ද
පොල් කැබැලි ද පමණි
ගේ මුදුන්වල
සෙල්ලම් කරමින් සිටි මීයන්
දැන් බිමට බැස
නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය
පූසන්
මීයන් අල්ලා ගැණීම
අමතක කොට
නර්තනය රස විඳින්නේය
කළ යුත්තක් වෙනත් නොමැත
ඉතිං අපි ද
අත් පොළසන් දී
දිරිමත් කළ යුතුය
නැතහොත්
මී කතුරුවල
අපව මාට්ටු කළ යුතුවනු ඇත
- තුවාරකන්
- පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
சுண்டெலிகள் பெருகிவிட்டன
- துவாரகன்
இந்தச் சுண்டெலிகளுக்கு
பள்ளிகளும் இல்லை
ஆசிரியர்களும் இல்லை.
அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம்
கருவாட்டு வாசனையும்
தேங்காய்ச் சொட்டுக்களும்தான்.
வீட்டு முகடுகளில்
விளையாடித் திரிந்த எலிகள்
இப்போது
தரையில் இறங்கி
நடனமாடத் தொடங்கிவிட்டன.
பூனைகள்,
எலி பிடிப்பதை மறந்துவிட்டு
நடனத்தை ரசிக்கின்றன.
வேறுவழியில்லை!
இனி நாங்களும்
கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும்.
இல்லையெனில்
எலிப்பொறிகளில்
எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும்.
26012023

பூதங்களை அடைத்துவைக்கத் தெரியாத மந்திரவாதிகள்

 


- துவாரகன்
-----------------
இந்த மந்திரவாதிகளுக்கு
ஒழுங்காக
மந்திரம் தெரியாதுபோலும்.
மிகத் திறமான
மந்திரவாதிகள்
எத்தனை பெரிய பூதங்களையும்
அடைத்துவைக்கும் வித்தையைக் கற்றிருந்தார்கள்.
காட்டிலோ கடலிலோ அகப்பட்ட
ஜாடிகளைத் திறந்து
பூதங்களிடம்
மனிதர்கள் அகப்பட்ட கதைகளை
பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இந்த மந்திரவாதிகள்
ஆடைகளை அழகாக அணிந்திருக்கிறார்களேயன்றி
மந்திரக்கோலில்லா மந்திரவாதிகளாகத்தான்
இருக்கிறார்கள்.
இன்று
தெருக்களிலும்
வீட்டுத் திண்ணைகளிலும்
புகுந்து அச்சுறுத்துகின்றன
விதம்விதமான பூதங்கள்.
18092023

ஜூன் 03, 2023

இது யாருடைய வீடு

 


- துவாரகன்
நினைவோரத்தில் தேங்கிய
கனவுகளைத் தூக்கிச் செல்கிறான்.
வளையம் உருட்டிவிளையாடிய ஒழுங்கை
கலங்கலாயிருக்கிறது.
புதிய பாதைகள் முளைத்திருக்கின்றன.
சிதைந்த வீடுகளைப்போல் முதியமுகங்களில் ஓவியத்தின் ரேகைகள்.
சந்தையின் இரைச்சலும்
சின்னக்கால்களால் நடந்த ஆரம்பப்பள்ளியும்
தரவையும்
கோயில்பொங்கலும்
கடல்மீனாகத் துள்ளியெழுகின்றன.
ஐந்து தோடம்பழ மிட்டாய்களை
நீண்டநேரம் உள்ளங்கையில் பொத்திவைத்த
ஈரலிப்பு.
தொலைந்துபோன காலங்களின் குளிர்மை
நெஞ்சை நிறைக்கிறது.
பாதை மருங்கில் அலங்கோலமாகக் கிடந்த
வேலியின் ஊடே
ஒரு வேற்றுமனிதனைப்போல
அந்த வீட்டைப் பார்க்கிறான்.
'வீட்டுக்கு முன்னால
மதில் இருந்ததென்று அக்கா சொன்னவா!'
வார்த்தைகள் குமிழிடுகின்றன.
மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொல்கிறான்.
'இது எங்கட வீடுதானோ?'
நினைவு,
கையிலிருந்து வீழ்ந்த
கண்ணாடியாகச்
சிதறுகிறது.
01062023

கதிரையதிகாரம்


- துவாரகன்
அதிகாரம் என்ன செய்யும்?
மண்டியிட வைக்கும்
மானிடத்தைக் கொல்லும்
அதிகாரம் என்ன செய்யும்?
குதிக்கால் உயர்த்திப் பேசும்
சுட்டுவிரல் காட்டி அடக்கும்
சாட்டையின் கைமாற்றம்
நுகத்தடியில் மாட்டப்படும்
தோள்களுக்கு
வானவில் வண்ணத்தைத்
தரப்போவதில்லை.
வானத்தில் பறந்துகொண்டிருக்கும்
காக்கையை
ஆராய்ந்துகொண்டு
நூறுபேர் நிற்கிறார்கள்.
நூற்றியோராவது ஆளுக்காக
சன்னதங் கொள்கிறது
கதிரையதிகாரம்.

துரோகத்தின் நாவுகள்

 


- துவாரகன்
துரோகத்தின் நாவுகள்
மண்ணில் ஊன்றிய வேர்களைப்போல் மறைந்துள்ளன.
காற்றுக் கைகளை நீட்டி
தாயென முலைதந்து
தாலாட்டிய நல்மரங்களென
எண்ணியிருந்தோம்.
நச்சுமரமாகித் துரத்துகின்றன.
துரோகத்தின் நாவுகள்தான்
சிலுவை சுமக்க வைக்கின்றன.
உணர்வைக் கொல்கின்றன.
சந்தனக் குழம்பு பூசி
நறுமண வார்த்தைகளோடு
உலாவும்
நாவுகளிலிருந்து
நினைவே நீ விலகிவிடு.
மறதியே நீ வாழ்ந்துவிடு.
வேர்களை அறுத்துக்கொண்டு
காற்றில் மிதக்க ஆசைப்படுகிறது
வெள்ளந்தி மனசு.

ஏப்ரல் 02, 2023

சுண்டெலிகள் பெருகிவிட்டன

- துவாரகன்


இந்தச் சுண்டெலிகளுக்கு 
பள்ளிகளும் இல்லை
ஆசிரியர்களும் இல்லை. 
அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் 
கருவாட்டு வாசனையும் 
தேங்காய்ச் சொட்டுக்களும்தான்.

வீட்டு முகடுகளில் 
விளையாடித் திரிந்த எலிகள் 
இப்போது
தரையில் இறங்கி 
நடனமாடத் தொடங்கிவிட்டன. 

பூனைகள்,
எலி பிடிப்பதை மறந்துவிட்டு 
நடனத்தை ரசிக்கின்றன. 

வேறுவழியில்லை!
இனி நாங்களும் 
கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும்.
இல்லையெனில் 
எலிப்பொறிகளில் 
எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும். 
26012023

பிப்ரவரி 23, 2023

பூஞ்சை

 


துவாரகன்

பூஞ்சை பிடித்த
இந்தக் கன்றுகளுக்குத்தான்
இன்னமும்
நீரூற்றிக் கொண்டிருக்கிறோம்.

எருக்குவியல் கலந்த
வளமான மண்.
ஊற்றுநீரோடி ஊறிய நிலம்.

வீரியமான விதைகளைத்தானே
மண்ணில் ஊன்றினோம்.
இந்த நோய்க்காவிகள்
எங்கிருந்துதான் முளைத்தனவோ?

பூஞ்சை பிடித்த பாகற்காய்
பூச்சி பிடித்த பயற்றங்கொடி
வேராகிய மரவள்ளிக்கிழங்கு

ஒரு கறி வைப்பதற்குக்கூட
முருங்கையிலை ஒடிக்கமுடியாது
மொய்த்துக் கிடக்கின்றன
மயிர்க்கொட்டிகள்.
09022023

ஜனவரி 27, 2023

துவாரகனின் 'காலத்தின் ரேகை' கவிதை சிங்களத்தில்



இப்னு அஸூமத் அவர்கள் சிங்கள மொழிக்கு அறிமுகப்படுத்தும் (மொ.பெ) எனது ஏழாவது கவிதை 'காலத்தின் ரேகை'. Ibnu Asumath அவர்களுக்கு அன்பும் நன்றியும். - துவாரகன்

தமிழ் மூலக்கவிதை இணைப்பு : காலத்தின் ரேகை - துவாரகன்

சிங்கள மொழிபெயர்ப்பு இணைப்பு : කාලයේ රේඛාව


කාලයේ රේඛාව
------------------
වෙහෙස අහුරා ඉසන වැහි බීරුමයකි
මිනිස් හඬ නොමැති පරතරය
පුරවන ගුවන් විදුලිය
කකුලේ අතුල්ලමින් සිටි බළලා ද
වලිගය අකුලමින් සිටි සුනඛයා ද
රවුමක් ගිහින්ය
දෙමළිච්චන් පමණක්
චතුරශ්ර මිදුලේ කුතුහලයෙන්
හැඟීම් නැති කර ගත් කලාමැදිරියන් පසුපස
මිනිස්සුන්ද ගිහින්ය
ක`ඵවර හා ආලෝකය එක්වූ ජීවිතයෙහි
ඇස් පිය ගසන එළිය
ඇයව සනසන්නේ නොමැත
නම කියා කැඳවන
හඬක් වෙනුවෙන් එම මොහොත
ගෙවී යමින්ය
අපිරිසිදු මේසය මත
දකුණු අත තබා ඈ
ක`ඵවර දෙස කුලෑටිව බලමින්ය
යම් පාද හඬක්
අදිසියෙන් ඇස් කණ්ණාඩිය ගෙන පලදින්නේය
සැරසටිය සොයාගන්නේය
හුදකලාව
ඇගේ පාද යට ඇකිළී තිබෙන්නට
කාලය තම රේඛාවන් අහුරා ඉසමින් යමින්ය
සිය පාඩුවේ
තුවාරකන්
පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
The line of time
------------------
A rainfall that is sprayed by tiredness
The gap without human voice
Filling up the radio
Is it the cat that was rubbing his leg?
The dog that was wagging its tail
Went for a ride
Only Tamilians
Out of curiosity in square yard
Behind the art halls that have lost their feelings
And the people are gone too
In a life where the light and the light are together
The light that blinks the eye
She is not going to be comfortable
So called by the name
That moment for a voice
Just passing by
At the dirty table
Keeping the right hand ඈ
Kulati is looking at the end
The sound of some feet
Wearing the eyeglasses from the stance.
Finding the decoration
Loneliness
To have crushed under her feet
Time is flying by stripping its lines
On my own
The towel
Translation - Ibnu is unusual