ஜூன் 03, 2023

துரோகத்தின் நாவுகள்

 


- துவாரகன்
துரோகத்தின் நாவுகள்
மண்ணில் ஊன்றிய வேர்களைப்போல் மறைந்துள்ளன.
காற்றுக் கைகளை நீட்டி
தாயென முலைதந்து
தாலாட்டிய நல்மரங்களென
எண்ணியிருந்தோம்.
நச்சுமரமாகித் துரத்துகின்றன.
துரோகத்தின் நாவுகள்தான்
சிலுவை சுமக்க வைக்கின்றன.
உணர்வைக் கொல்கின்றன.
சந்தனக் குழம்பு பூசி
நறுமண வார்த்தைகளோடு
உலாவும்
நாவுகளிலிருந்து
நினைவே நீ விலகிவிடு.
மறதியே நீ வாழ்ந்துவிடு.
வேர்களை அறுத்துக்கொண்டு
காற்றில் மிதக்க ஆசைப்படுகிறது
வெள்ளந்தி மனசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக