டிசம்பர் 06, 2020

மலேசியா இயல் பதிப்பகம் நிகழ்த்திய உரையாடலில்...

  மலேசியா இயல் பதிப்பகமும் இலங்கை ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடாத்திய இலங்கை எழுத்தாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் 6ஆம் நாள் சு. குணேஸ்வரனுடன் (துவாரகன்) வலையொளியில் நிகழ்த்திய நேரலையின் காணொளி. 



டிசம்பர் 04, 2020

சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல்

கட்டுரை

- கலாநிதி சு. குணேஸ்வரன் 

தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றது என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது. 
தொடரந்து வாசிக்க சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழீபாடாக நடுகல் - கலாநிதி சு. குணேஸ்வரன் otamil.com/index.php?option=com_content&view=article&id=5639%3A2020-01-18-18-01-21&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82&fbclid=IwAR3fnfOcZkY1TuEQb3Xq6W8bfMOmeNAnfDlmcpG5eD58z2pmPRrOzHXPEg8


மண்ணில் மலர்ந்தவை


"இது அவர் அவ்வப்போது எழுதிய சிறிய கட்டுரைகளாக இருந்தாலும் இந்நூலினது ஒவ்வொரு உள்ளடக்கமும் எளிமையான மொழிநடையில் வலுவான நோக்கில் அமைந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடவேண்டியதாகும். இது குணேஸ்வரனின் தனித்துவம் எனக்கூறுவதும் மிகப் பொருத்தமானது. தவிரவும் உணர்வு தோய்ந்து எழுதுவதும் செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்தலுங்கூட இவரது தனித்துவ இயல்பாகக் கருதுவதில் தவறிருக்க முடியாது." சு.குணேஸ்வரனின் "மண்ணில் மலர்ந்தவை" என்ற நூலுக்கு இராகவன் எழுதிய அறிமுகக் குறிப்பு. தொடர்ந்து வாசிக்க மண்ணில் மலர்ந்தவை