முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசப்பாம்புகளின் உலகத்தில் வாழ்தல்


-துவாரகன்-

எப்போதும்
தீண்டுவதற்குத் தயாராகத் தலையுயர்த்திய
பாம்புகளின் உலகத்தில்
வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம்.

சதா நாவை நீட்டிக் கொண்டு
புற்றிலும் பற்றை மறைவிலும்
ஆட்களற்ற வெளிகளிலும்
தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.

குறிவிறைத்து அலையும் குழுவன்மாடுபோல்
கூட்டுக் கலவியில் களித்திடத் துடிக்கும்
தெருநாய்கள்போல் அலைகின்றன.

பெருந்தெருக்களில்
தம் விஷப்பற்களைக் காட்டி இளிக்கின்றன.
நஞ்சுப் பையை
வாயில் ஒளித்து வைத்துக் கொண்டு
எங்கள் இருக்கையையும் படுக்கையையும்
பங்கு கேட்கின்றன.

பக்கத்தில் புற்றிருந்தும்
கொல்வதற்குத் தடியிருந்தும்
பாம்புக்குப் பால்வார்க்கும் உத்தமர்களோடு
ஒன்றும் இயலாத குஷ்டரோகிகளாக
சுற்றியிருக்கின்றனர் மனிதர்.

இது பாம்புகளின் உலகம்
அதில் நாங்கள் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம்.
160820102225

கருத்துகள்

  1. I am very like this Poem.Some thing is cover this
    Poetry.wonder full.

    பதிலளிநீக்கு
  2. கருத்தாளமுள்ள நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. நாதியற்ற நம் வாழ்வை சொல்ல இதைவிட வார்த்தைகள் ஏது?
    அம்பலத்தார்

    பதிலளிநீக்கு
  5. அம்பலத்தார்; தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...