முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஓங்கியறைந்த வார்த்தை

  - துவாரகன் முகத்தில் ஓங்கியறைந்த வார்த்தை நீண்ட நேரமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது உவப்பில்லாத அந்த வார்த்தையை மறைப்பதற்காக நேரம் கடத்தும் வித்தையை உடலும் தெரிந்து வைத்திருந்தது யன்னல் மறைப்புக்குக் கட்டிய துணியை அவிழ்த்து மீளவும் கட்டுகிறான் உள்ளேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையை வெளியே வைக்கிறான் மற்றையது உள்ளே மாறுகிறது வெறுமையான தேநீர்க்குடுவை தூக்கிப் பார்த்து நகர்த்துகிறான் தலைவாசல் முன்னிருந்த கால்விரிப்பு தூசு தட்டப்படாமலே நகர்த்தப்படுகிறது யாரோ வாசலில் நீண்ட நேரமாக அழைத்திருக்கிறார்கள் சின்னவன் வந்து கைகளால் தட்டித் திசைகாட்டுகிறான் எவ்வளவுதான் மறந்தாலும் மறைத்தாலும் அது விடுவதாயில்லை. நன்றி : பதிவுகள்

மூளையைத் தோய்த்தல்

  - துவாரகன்   அழுக்கு அகற்றுதல் நன்று உள அழுக்கு அகற்றுதல் அதனிலும் நன்று வழிகள் தெரிந்து வைத்திருந்தோம்   மீதிப் பணியாரத்தோடு பண்பையும் குப்பைக்கூடையில் வீசி விட்டோமே! யார் தருவார் அறிவாசனம்? யாருக்கு யார் சரியாசனம் என்றுதானே தராசுடன் திரிகிறோம்   ஒரு பாதகமும் இல்லை மூளையைத் தனியே கழற்றி எடுத்து சலவை இயந்திரத்தில் தோய்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.    

துவாரகனின் நான்கு கவிதைகள்

  1.   அந்தரத்தில் மிதத்தல் மமதையை, யுகங்களாகச் சுமந்துவந்த காலம் இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. கபடம் நல்ல முகமூடி அதிகாரம் ஒரு சப்பாத்து அதற்குத் தெரிவதெல்லாம் பூச்சிகளும் புற்களும்தான். அதிகார போதையில் வானமும் வசப்படும் சிட்டாய்க்கூடப் பறக்கலாம். பறந்தாலென்ன? அளந்தாலென்ன? நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும். மண் புதைகுழி. தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும். சாம்பல்கூடக் கரைந்துவிடும். எதுவுமில்லை எதுவும். 042024 2.  வேர்கள் மறைந்தே இருக்கட்டும் வேர்கள் எப்போதும்போல் மறைந்தே இருக்கட்டும். மண்ணின் பிடிமானத்தை விட்டு அவை வெளியே வரவேண்டாம். கிளைகளின் களிநடனம் பற்றியும் விருட்சத்தின் வலிமை பற்றியும் அவர்கள் மனங்குளிரப் பேசுவார்கள். தங்கள் வேர்களையும் தேடுவதாகத்தான் கூறுவார்கள். அத்தனையும் பசப்பு வார்த்தைகள். மண்ணும் பெயல்நீரும் பொத்திவைத்த ஆழவோடிய வேர்கள் வெளியே வரவேண்டாம். அவர்களின் குடுவைகளில் இருப்பது உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல. உயிர்வாங்கும் சுடுநீர். 052024 3.  ஒரேயொரு கேள்வி கலகலப்புக் குறையாத கூடு அது. ஒவ்வொரு அறையின் சுவர்மூலைகளும் விளக்குக்கரி ...

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

துவாரகன் அ யற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக… காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு. அன்றிலிருந்து அவரின் துரைத்தனக் கனவு நிறைவேறியது. இனி நினைவில் இருந்த இரண்டுவரிக் கவிதைகூட அவருக்குத் தேவைப்படாது. அவர் துரை. puthu.thinnai.com

வாழ்தல்

  - துவாரகன் பிரமிட்டுக்களுள் பாடம்போட்ட மம்மிகளோடு வாழ்கின்ற கனவுகள் வந்து தொலைக்கின்றன இளந்தென்றற் காற்றில் பசுந்தழைகளோடு தலையாட்டி ஆழவேரோடிய மரத்தின் நம்பிக்கை நினைவுகளில் மட்டும்தானா? பெருமூச்சுக்களிடையே தொலைந்து போகின்றன அழகிய காலங்கள் இற்றுப்போய்விடுமென்று தெரிந்தும் வாழைநாரால் அலங்கரித்த பூச்சாடியை வீட்டு முகப்பில் வைத்திருக்கிறான் பால்யவயதுத் தோழன். 2025/07

வேர்கள் மறைந்தே இருக்கட்டும்

-துவாரகன் -------------- வேர்கள்  எப்போதும்போல்  மறைந்தே இருக்கட்டும். மண்ணின் பிடிமானத்தை விட்டு  அவை வெளியே வரவேண்டாம். கிளைகளின்  களிநடனம் பற்றியும் விருட்சத்தின்  வலிமை பற்றியும் அவர்கள்  மனங்குளிரப் பேசுவார்கள். தங்கள் வேர்களையும்  தேடுவதாகத்தான் கூறுவார்கள்.  அத்தனையும் பசப்பு வார்த்தைகள். மண்ணும் பெயல்நீரும் பொத்திவைத்த  ஆழவோடிய வேர்கள் வெளியே வரவேண்டாம். அவர்களின் குடுவைகளில் இருப்பது  உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல.  உயிர்வாங்கும் சுடுநீர். 052024

துவாரகனின் 'அந்தரத்தில் மிதத்தல்' கவிதை சிங்களத்தில்

'அந்தரத்தில் மிதத்தல்' கவிதை சிங்களத்தில், நன்றி : இப்னு அஸூமத் https://www.facebook.com/thuwan.azeez.7/posts/pfbid0291ArJZtaKofHjRS45MAA9fTzYSWDtTFFmnGAiN1LuGhbWof8MjepGxheH2XAwzmJl   අවකාශයේ පාවීම ------------------- මමත්වය යුග මෙන් ඔසවා ගෙන ආ කාලය මෙම මිනිසුන්ගේ දෑත්වල රැස්ව ඇත කුහකකම හොඳ වෙස් මුහුණක් බලය සපත්තුවකි ඒවා දන්නේ කෘමීන් හා තණ කොළය බල වෙරි මතෙහි අහස ද වසඟ වේ කුරුල්ලන් මෙන් පියඹා යන්නට ද පු`ඵවන පියඹා ගිය ද මැනුම් කළ ද සිට ගන්නට ආ යුත්තේ මහ පොළවටය පස් මිනීවළ ගින්න පවා කා හමාර කරන්නේය අ`ඵ පවා දියව යන්නේය කිසිවක් නොමැත කිසිවක් - තුවාරකන් - සිංහලෙන් - ඉබ්නු අසූමත්

அந்தரத்தில் மிதத்தல்

  -துவாரகன் மமதையை,  யுகங்களாகச்  சுமந்துவந்த காலம்  இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. கபடம் நல்ல முகமூடி அதிகாரம் ஒரு சப்பாத்து அதற்குத் தெரிவதெல்லாம்  பூச்சிகளும் புற்களும்தான். அதிகார போதையில் வானமும் வசப்படும்  சிட்டாய்க்கூடப் பறக்கலாம். பறந்தாலென்ன? அளந்தாலென்ன? நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும். மண் புதைகுழி.  தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும். சாம்பல்கூடக் கரைந்துவிடும். எதுவுமில்லை எதுவும். 042024 https://vanakkamlondon.com/news/2024/05/217653/

களவாடப்பட்ட நினைவுகள்

  -துவாரகன் நேற்றைய கனவிலென் புராதன நகரத்தைக் கண்டேன். கதவில்லாத கடைகள் வேலியில்லாத வளவுகள் குன்றும் குழிகளுமாகிப்போன வீதிகள் எல்லாவற்றையும் மக்கள் தங்கள் கதைகளால் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இருட்திட்டுக்கள் எல்லாம் ஒளியால் வழிந்தன. பஸ்வண்டி, புராதன நகரம் என்ற பெயர்ப்பலகையோடு மிடுக்காக வந்து நின்றது. ராணியம்மா தன் வியாபாரத் தளபாடங்களோடு வந்திறங்கினார். ஒரு கொண்டாட்ட மனநிலையை அவர்களிடம் கண்டேன். தாங்கள் நட்டுவைத்த மரங்களை... நினைவுகளை வளர்த்த வீடுகளை... ஆரத் தழுவினார்கள். பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள்போல் சில வீடுகள் தங்கள் முகங்களைத் தொங்கப் போட்டுக் கொண்டுநின்றன. என் இளைய சகோதரன் கேட்டான். இந்தப் புராதன நகரத்தின் பெயர் என்னவென்று. ஈ. தன் பெயரை மறந்ததுபோல் நினைவுகள் களவாடப்பட்ட என் புராதன நகரத்தின் பெயரை வாழ்ந்தவர் வீழ்ந்தவர் நினைவுகளிலும் மிஞ்சிய எச்சங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன். 112023

மறைந்திருக்கும் பறவைகள்

  -துவாரகன் வரிசை குலையாத அழகு. காற்றோடு கலந்த சுகந்தம். புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை. பந்தற்கால் அருகே நிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி. சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்! எந்தப் பறவையென்று தெரியவில்லை. கைப்பிடி, இருக்கை, கைப்பை அத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது. மிக இரகசியமாக, அழுக்கைத் தெளிப்பதற்காகவே காத்திருக்கின்றன பறவைகளும். மனிதர்கள்போலவே! 18092023 vanakkamlondon.com

துவாரகனின் இரண்டு கவிதைகள்

1. அறுவடைக் காலம்  - துவாரகன்  விதைக்கும்போது நல்விதை தேடிவிதை  என்றார் அப்பு.  ஒரு பூசணி விதையெனினும்  முற்றிய நல்விதை  சாம்பல் சேர்த்து  அடுப்பு முகட்டில்  பொட்டலமாய்த் தொங்க விட்டார்.  மதர்த்து பூத்து  காய்த்துக் குலுங்கின நல் விதைகள். எங்கள் காலத்திலும்  விதைகள் கிடைத்தன.  பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்! அறுவடை செய்கிறோம் புற்களும் களைகளும். 2. நிறைகுடம்  - துவாரகன்  அதிகம் பேசாதே  சிரித்துக் கதைக்காதே எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்  அறிவாளி.  மலைமேல் எதுவுமில்லை எனினும்  மழை பெய்கிறது நிறைகுடமாயிரு புத்திசாலி. குறைகுடம்கூடத் தளம்பாது  யாருக்குத் தெரியப்போகிறது தளம்பாது இரு நீயும் நிறைகுடம். நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ் 

சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்

  எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும். 'இப்னு அஸூமத்'தின் சிங்கள மொழிபெயர்ப்பு இங்கே உள்ளது : facebook.com/thuwarakan தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது : vanakkamlondon.com --------------- මෙම හික් මීයන්හට පාසැලක් ද නොමැත ගුරුවරුන් ද නොමැත ඔවුන් දන්නා දේ කරවල සුවඳ ද පොල් කැබැලි ද පමණි ගේ මුදුන්වල සෙල්ලම් කරමින් සිටි මීයන් දැන් බිමට බැස නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය පූසන් මීයන් අල්ලා ගැණීම අමතක කොට නර්තනය රස විඳින්නේය කළ යුත්තක් වෙනත් නොමැත ඉතිං අපි ද අත් පොළසන් දී දිරිමත් කළ යුතුය නැතහොත් මී කතුරුවල අපව මාට්ටු කළ යුතුවනු ඇත - තුවාරකන් - පරිවර්තනය - ඉබ්නු අසූමත් சுண்டெலிகள் பெருகிவிட்டன - துவாரகன் இந்தச் சுண்டெலிகளுக்கு பள்ளிகளும் இல்லை ஆசிரியர்களும் இல்லை. அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் கருவாட்டு வாசனையும் தேங்காய்ச் சொட்டுக்களும்தான். வீட்டு முகடுகளில் விளையாடித் திரிந்த எலிகள் இப்போது தரையில் இறங்கி நடனமாடத் தொடங்கிவிட்டன. பூனைகள், எலி பிடிப்பதை மறந்துவிட்டு நடனத்தை ர...

பூதங்களை அடைத்துவைக்கத் தெரியாத மந்திரவாதிகள்

  - துவாரகன் ----------------- இந்த மந்திரவாதிகளுக்கு ஒழுங்காக மந்திரம் தெரியாதுபோலும். மிகத் திறமான மந்திரவாதிகள் எத்தனை பெரிய பூதங்களையும் அடைத்துவைக்கும் வித்தையைக் கற்றிருந்தார்கள். காட்டிலோ கடலிலோ அகப்பட்ட ஜாடிகளைத் திறந்து பூதங்களிடம் மனிதர்கள் அகப்பட்ட கதைகளை பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மந்திரவாதிகள் ஆடைகளை அழகாக அணிந்திருக்கிறார்களேயன்றி மந்திரக்கோலில்லா மந்திரவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். இன்று தெருக்களிலும் வீட்டுத் திண்ணைகளிலும் புகுந்து அச்சுறுத்துகின்றன விதம்விதமான பூதங்கள். 18092023

இது யாருடைய வீடு

  - துவாரகன் நி னைவோரத்தில் தேங்கிய கனவுகளைத் தூக்கிச் செல்கிறான். வளையம் உருட்டிவிளையாடிய ஒழுங்கை கலங்கலாயிருக்கிறது. புதிய பாதைகள் முளைத்திருக்கின்றன. சிதைந்த வீடுகளைப்போல் முதியமுகங்களில் ஓவியத்தின் ரேகைகள். சந்தையின் இரைச்சலும் சின்னக்கால்களால் நடந்த ஆரம்பப்பள்ளியும் தரவையும் கோயில்பொங்கலும் கடல்மீனாகத் துள்ளியெழுகின்றன. ஐந்து தோடம்பழ மிட்டாய்களை நீண்டநேரம் உள்ளங்கையில் பொத்திவைத்த ஈரலிப்பு. தொலைந்துபோன காலங்களின் குளிர்மை நெஞ்சை நிறைக்கிறது.   பாதை மருங்கில் அலங்கோலமாகக் கிடந்த வேலியின் ஊடே ஒரு வேற்றுமனிதனைப்போல அந்த வீட்டைப் பார்க்கிறான். 'வீட்டுக்கு முன்னால மதில் இருந்ததென்று அக்கா சொன்னவா!' வார்த்தைகள் குமிழிடுகின்றன. மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொல்கிறான். 'இது எங்கட வீடுதானோ?'   நினைவு, கையிலிருந்து வீழ்ந்த கண்ணாடியாகச் சிதறுகிறது. 01062023