முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செட்டிக்குளமும் ஒரு பிரெஞ்சு மருத்துவனும்



-----துவாரகன்

வெடித்து விழுந்த மின்னல் வெட்டுக்களிடையே
சிதறித் தெறித்தன உயிர்க்கொடிகள்
முகத்தை விட்டுத்
துள்ளி விழுந்தன கண்கள்
மரங்களின் பொந்துகளிடை
பதுங்கிக் கொண்டன காதுகள்
கைவிரல்கள் மாமரங்களில் தொங்கிக் கொண்டன
கால்கள் தென்னை மரங்களில் தெறித்து வீழ்ந்தன
பிரிந்த குடலிலிருந்து
ஊறிய அரிசியும் பருப்பும்
சிவப்பாய்ச் சிதறின
துடித்துக் கொண்டிருந்த
இதயத்தை
நாயொன்று காவிச்சென்றது
முழுதாய்க் கிடந்த கண்முழிகளை
கோழிகள் கொத்திச் சென்றன
சிதறித் தூவிய தசைப்பிண்டங்களை
எறும்புகள் இழுத்துச் சென்றன.
உயிர்ப்பிச்சைக்கான அவலத்தினிடை
தன் முன்னே பரப்பியிருந்த
இரத்தம் நிரம்பிய உடல்களிலிருந்து
முழுதாக ஒரு மனிதனை
மீண்டும் உருவாக்க
செட்டிக்குளத்தில்…
பிரெஞ்சு மருத்துவனொருவன்
முயன்று முயன்று
தோற்றுக் கொண்டிருக்கிறான்
100520090835

கருத்துகள்

  1. நான் இதனை யுகமாயினியில் வந்தபோதே வாசித்தேன். எனக்குப் பிடித்த கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே, யுகமாயினியில் இக்கவிதையை நன்றாக வடிவமைத்திருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையும் நன்று. வடிவமைப்பும் நன்று. அதே இதழில் எனது சிறுகதையும் பிரசுரமானது. வாசித்தீகளா?

    பதிலளிநீக்கு
  4. நன்றி நிர்மலன், நானும் யுகமாயினி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...