பிப்ரவரி 23, 2023

பூஞ்சை

 


துவாரகன்

பூஞ்சை பிடித்த
இந்தக் கன்றுகளுக்குத்தான்
இன்னமும்
நீரூற்றிக் கொண்டிருக்கிறோம்.

எருக்குவியல் கலந்த
வளமான மண்.
ஊற்றுநீரோடி ஊறிய நிலம்.

வீரியமான விதைகளைத்தானே
மண்ணில் ஊன்றினோம்.
இந்த நோய்க்காவிகள்
எங்கிருந்துதான் முளைத்தனவோ?

பூஞ்சை பிடித்த பாகற்காய்
பூச்சி பிடித்த பயற்றங்கொடி
வேராகிய மரவள்ளிக்கிழங்கு

ஒரு கறி வைப்பதற்குக்கூட
முருங்கையிலை ஒடிக்கமுடியாது
மொய்த்துக் கிடக்கின்றன
மயிர்க்கொட்டிகள்.
09022023

2 கருத்துகள்:

  1. முகநூலில் இருந்து..
    Kanapathipillai Varathavel
    மிகவும் சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் தம்பி
    Reply1w
    Ahileswaran Sambasivam
    👍
    Reply1w
    Alex Paranthaman
    வெளிப்பார்வைக்கு விவசாயம் சம்பந்தமான கவிதையாகத் தோற்றம் பெற்றிருப்பினும், உள்ளே பல அரசியல் சங்கதிகளைச் சொல்கிறது இக்கவிதை. இச்சங்கதிகளைப் பூடகமாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துகள்!
    Reply1w
    Murugàthas Sk
    சிறப்பு
    Reply1w
    Kunarathinam Ilanko
    சிறப்பு
    Reply6d

    பதிலளிநீக்கு
  2. முகநூலில் இருந்து..
    Alex Paranthaman
    pdeSosrtonhg

    சில கவிதைகளை கவிஞன் வெளிப்படையாகவே கூறிவிட முடியும். ஆனால், கூறவேண்டிய விடயத்தைக் கூறித்தான் ஆகவேண்டுமெனில், கவிஞன் தன் பாதுகாப்புக்கருதி இப்படித்தான் வெளிப்படுத்துவான். வெளிப்படுத்த வேண்டும்.
    மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது ஒரு விவசாயம் சம்பந்தமான கவிதையாகத் தோற்றம் காட்டும். ஆனால், கொஞ்சம் கவனித்துப் படிக்கும்போது.. சமகாலம் இதற்குள் புலப்படுவது புரியும்.
    நல்லதொரு 'குறியீட்டுக் கவிதை'.

    பதிலளிநீக்கு