ஜூன் 21, 2021

மிட்டாய் வியாபாரியின் குதிரையேற்றம்

 

துவாரகன்

 

புதிய குதிரையில் சிட்டாய்ப் பறந்த

மிட்டாய் வியாபாரி

உடம்பெல்லாம் சிரிப்பாக நின்றான்.

 

மிட்டாய்ச் சுவைக்கு மயங்கி

குதிரை கொடுத்தவன்

குத்திட்ட மயிர்த்துளைகளுடன்

குதித்துக் கொண்டிருந்தான்.

 

பேரத்தின் இறுதியில்

கடையும் குதிரையும் கைமாறின.

 

ஒருநாள் குதிரை திரும்பியே விட்டது.               

கையறுநிலையில் கடைக்காரன்.

 

சாபம்பெற்ற இந்திரனின் கண்களை

மிட்டாய்க் காரனும் குதிரைக்காரனும்

இனிப்பாலும் சிரிப்பாலும் மூடியபடி

கடந்து கொண்டிருக்கின்றனர்.

2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக