நவம்பர் 01, 2022

பூங்குருவிகள்

துவாரகன்

பூங்குருவிகள் இப்போ
சோலைகளுக்கு வருவதில்லை.
நீரோடும் வாய்க்காலில்
சிறகுலர்த்துவதில்லை.
பறவைகளில் நீங்கள்தான்
இனிமையாகப் பாடக்கூடியவர்கள்
யாரோ கதையடித்து விட்டார்கள்.
அன்றிலிருந்து
மண்டை வீங்கிய
மனிதர்களாகிவிட்டன
பூங்குருவிகள்.
 
உறவுகளைக் கொத்திக் கலைத்தன.
கீச்சிடும் பறவைகளை அதட்டின.
குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.
வீதியில் வழிப்பறி செய்தன.
வெற்றிலைத் துப்பலையும்
கெட்ட வார்த்தைகளையும்
கழித்துக் கொட்டும் மனிதர்கள்போல்
கண்ட இடமெல்லாம் எச்சமிட்டன.
வலதுபுறம் சமிக்ஞைகாட்டிவிட்டு
இடதுபுறம் திரும்பின.
 
இனி
அந்த வயல்வெளியில்
சிறகுலர்த்தும் அழகு இல்லை.
இனிமை ததும்பும்
மென்குரல் இல்லை.
 
பூங்குருவிகளும்
மனிதர்களைப் போலவே
துரோகமும் ஏமாற்றுவித்தையும்
கற்றுக் கொண்டனபோலும்.


நன்றி : வகவம், கவிதை இதழ் 2
2022/10

1 கருத்து:

  1. முகநூல் கருத்துக்களில் சில..




    • Varathalingam Ramanasuthan
    Excellent
    Subramaniam Kuneswaran
    https://vanakkamlondon.com/.../kavithaikal/2022/10/175829/
    Tharma Theva
    மிக அருமை
    Rama Sampanthan
    சிறப்பு
    Ganeshan Tackseelan
    அருமை சேர்
    Imayoor Thasan
    அருமையான வரிகள் சேர்...
    Ashroff Shihabdeen
    மிக அழகான ஒரு கவிதை!
    MaThi Sutha
    அருமையான
    வரிகள்
    Jogeswari Sivapiragasam
    மனிதர்களை தலை குனிய வைத்துவிட்டது.
    Thangarajah Jeevarajah
    மனிதர்களை நானும் அப்படித்தான் அறிந்துள்ளேன். உண்மை உரைக்கும் கவிதை மிக நன்று குணேஷ்.

    பதிலளிநீக்கு