அக்டோபர் 02, 2021

அறிவாளி அல்லது கூழாங்கற்களால் வால் நிமிர்த்துதல்



- துவாரகன்

 

இன்னும் எத்தனை காலம்தான்

கொம்பு சீவிக் கொண்டிருக்கப் போகிறாய்?

இன்னமும் நிமிர்த்த முடியாத வாலோடுதான்

இந்தச் செம்பாட்டு மண்ணில்

நடந்து திரிகிறாயா?

 

சுருண்டுபோன புடலங்காய்க்கு

ஒரு சிறுகல் போதுமே!

நான்கு தலைமுறையாக

இந்த நிஷ்டையைக் கலைக்க

ஓர் ஒளிப்பொட்டுக்கூடவா

உனக்குக் கிடைக்கவில்லை?

 

இனி மலையைப் பிளக்கவேண்டாம்

ஒரு கூழாங்கல்லைத் தேடி எடு

எறிவதற்கல்ல.

சுருண்டுபோன வாலை நிமிர்த்துவதற்கு.

01102021.

நன்றி: https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/132500/?fbclid=IwAR0OgD5VcrmsiRCniJoK9KxdXUOpemS-5cI1CUvEJhi127p1GL-zJ3K7TLY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக