-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655
துவாரகனின் வலைப்பதிவு
துவாரகன், என்னால் அப்படி 'ங' போல வளைய முடியாதனால் தான் பலருக்கு ( வீட்டிலும் வெளியிலும்) எதிரியாகி உள்ளேன் ! நல்ல கவிதை
பதிலளிநீக்குஅப்படி வளைந்தால்தான் உயிர்வாழவும், உயரவும் முடியுமாம். அதிகமானவர்கள் அதற்காக வளைந்து வளைந்து கூனலாகிப் போனார்கள். பிறகு என்ன பிரயோசனம்?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தாரணி.