முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

* யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டை

-----துவாரகன் ஒரு நாள் என் வீடு இருந்தது. வயல்வெளிக்கு நடுவே ஆலமர விருட்சம் போல் அரைக்காற்சட்டையோடு அண்ணா டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான் அப்பா விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார் மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும் குளத்தில் வரால் மீன் பிடிக்கவும் சின்னத்தம்பி என்னுடன் வருவான். தங்கையும் நானும் கதை பயில தேக்கமரமும் மலைவேம்பும் எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள். மாலையானதும் மாடுகள் அசைபோடுவது போல் உறவுகள் சுற்றியிருந்து அன்பை அசைபோடுவோம். அம்மாவும் பெரியக்காவும் சுவையாகச் செய்த சாப்பாடு. செய்திக்குப் பின் அப்பா என்னிடம் தரும் றேடியாவில் வழிந்து வரும் பாட்டு. காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம் எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன். இப்போ இரண்டு காவலரனுக்கு நடுவில் மழை வெள்ளம் தரைதட்ட தொண்டு நிறுவனம் தந்த படங்கு காற்றில் அடிக்க எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில் அம்மாவின் காய்ந்த விழிகளோடு நானும் காத்திருக்கிறேன். யாரோ போட்டு முடித்து முகாமொன்றில் தானமாகக் கிடைத்த ஒரு இரவுச் சட்டை என்னை மூடிக்கிடக்கிறது. 241220091122
 * (தலைப்பு அ. முத்துலிங்கத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது.)

கருத்துகள்

  1. அன்புமிக்க துவாரகன் காலத்தை மிகுந்த உக்கிரத்துடன் பதிவு செய்பவை உங்கள் கவிதைகள் என்பதை இந்தக் கவிதையும் நிரூபிக்கிறது. வாழ்த்துக்கள்

    அன்புடன் அஜந்தகுமார்

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே, தங்கள் வலைப்பதிவு பார்த்தேன். தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இது யாரின் கவிதை

    முத்துலிங்கத்தினுடையதா உங்களுடையதா?

    பதிலளிநீக்கு
  4. கவிதை என்னுடையதுதான். ஆனால் தலைப்பு முத்துலிங்கத்தினுடையது. அவரின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' படித்தபோது அந்த வரிகள் கவிதைக்குரியதாக எனக்குப் பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...