மே 16, 2022

ஐந்நூறு கிராமங்களைத் தின்னும் ஆடு

 -துவாரகன்


இருவர் சேர்க்கையால் 

கலந்த நாற்றம்

ஐவரைச் சுற்றிக்கொண்டிருந்தது.

இப்போது ஐந்நூறு ஊர்களில் வீசிக்கொண்டிருக்கிறது


எப்படியாயினும் 

அந்த நாற்றத்தைத் தீர்க்கும்

வழியெதுவும் 

அவனுக்குப் புலப்படவில்லை.


ஒருவேளை

இரண்டு கிராமங்களைத் தின்ற

அந்த வெள்ளாடு வாய்த்தால்

ஐந்நூறு கிராமங்களில் உலாவும்

நாற்றத்தைத் தின்று தீர்த்துவிடலாம்.


ஒரேயொரு பத்திரம்தான்.

எழுதித்

தலைமாட்டில் வைத்துப் படுத்திருக்கிறான்.

ஒரு வெள்ளாடு

அந்த நாற்றத்தைத் தீர்த்துவிடும்

என்ற நம்பிக்கையோடு.

15052022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக