நவம்பர் 02, 2021

துறவியின் கற்குவியல்


- துவாரகன் 


கருமேகத்தால்

உன் நிலவு மூடப்பட்டிருக்கிறது. 


உன் நாவு 

எப்போதாவது 

அந்த வார்த்தைகளை 

உச்சாடனம் செய்ததா?

பெருவெளிக்குள் 

நுழைய முடியமுடியாதபடி 

உன்னைப் போர்த்தியிருக்கிறாய்.


நான் ஒதுக்கித் தள்ளியவற்றுள் 

ஒரு மூக்குமின்னியை

நேற்றும் நீதானே கண்டெடுத்தாய்.


அந்தக் கற்குவியல் 

மற்றவர் கணக்கல்ல.

உனது கணக்கு

அதற்கு சாட்சியம் நீயே!


கமண்டல நீராவது 

கிடைக்கவேண்டும் என்றால்

வேடத்தைக் கலைத்துவிடு.

02112021

http://www.easy24news.com/2021/11/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/?fbclid=IwAR1uSdB6_7eiXE_xNw8HMI7cCHggt2EbZzlP2WhVQYhIHRcps3vNdSrNNzc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக