நவம்பர் 02, 2021

கடவுள் மறைத்து வைத்த உலகம்



- துவாரகன் 


கொள்ளைக்காரரின் கண்களிலிருந்து 

கடவுள் 

அந்த உலகத்தை 

மறைத்து வைத்திருந்தார்


அது குழந்தைகளின் உலகம்


அங்கே

பறவைகளின் சங்கீதம் இருந்தது

காற்றுக் கரங்களின் 

அரவணைப்பு இருந்தது. 

தாய்மடியின் உயிர்ப்பு இருந்தது


கொடியோரின் சுவடுகள் இல்லை

சுட்டுவிரல்களின் அசைவுகள் இல்லை

உயிர் பறிக்கும் குழிகள் இல்லை


நீரும் நிலமும் வெளியும் 

வரைந்து வைத்த 

ஓவியங்கள் இருந்தன


உங்கள் திமிர்த்த பார்வைகள் 

அங்கு படவேண்டாம்

உங்கள் பாவப்பட்ட கரங்கள் 

அங்கு தீண்ட வேண்டாம்


அது குழந்தைகளின் உலகம். 

17102021

https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/135190/?fbclid=IwAR3XZgS_zLd0Q3c_pIiMPHU2SPaL_YftBq4oTRLONQdHIqzT-9_eJ6YB61c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக