-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655
துவாரகனின் வலைப்பதிவு
1980களில் ஆரம்பித்த எமது உறவுகளினது இழப்பு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இழப்புக்களினால் பெற்ற வடுக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன.
பதிலளிநீக்குமனங்களில் நீங்காதிருக்கிற உறவுகளுக்கு என்னுடைய அஞ்சலிகளும்.
எங்களால் என்னதான் செய்யமுடியும்்? எனது கவிதை ஒன்றின் தலைப்புப்போல் 'குப்பைமேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய்கள்' தான் நண்பரே.
பதிலளிநீக்கு