முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பறித்தெடுக்கப்பட்ட மூலப்பிரதி



- துவாரகன் 

துருப்பிடித்த அடையாளம் அழி
முலாம் பூசு
கண்ணைப் பறிக்கும்
வண்ண விளக்குகள் பொருத்து
கண்டவர் வாய் பிளக்கட்டும்.

மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி
புனைந்தெழுது
புதிய பக்கம் சேர்
ஏமாந்து போனவனிடம்
பிரதியே இல்லையென்று சொல்.

வாதம் செய்தால்
உன் கச்சையில் இருந்து
பழுப்பேறிய பக்கத்தை எடுத்துக்காட்டு
இதுதான் மூலஓலை என்று.

தலையாட்டிப் பழக்கப்பட்டவை
கோயில் மாடுகள் மட்டுமல்ல.
10/2012
நன்றி - பதிவுகள்

கருத்துகள்

  1. நல்ல கவிதையை படித்ததான மகிழிசி கிடைத்தது.ஆனாலும் எனக்குள்ளேயான தவிப்பும் உங்களிடமும் இருப்பது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல.

    எத்துணை உண்மை

    பதிலளிநீக்கு
  3. வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம், ஆனால் வரலாறு மாறாது, நமக்கு உணர்வு உள்ளவரை.

    உள் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. முல்லை அமுதன், டொக்டர் எம்.கே முருகானந்தன், வணக்கம் தமிழ்; ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. from facebook friend...
    Anand Prasad, Kanthavarothayan Murugesu, Jeyaranjinee Gnanadas and 5 others like this.

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல., அருமை
    14 hours ago · Unlike · 2

    இடுகாட்டான் இதயமுள்ளவன்
    மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி
    புனைந்தெழுது புதிய பக்கம் சேர் @''''தமிழன் தலைவிதி ....
    14 hours ago · Unlike · 2

    Kanthavarothayan Murugesu
    தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல.....
    8 hours ago · Like · 1

    பதிலளிநீக்கு
  6. facebookஇல் நந்தினி சேவியர் எழுதியது...

    Nanthiny Xavier
    நல்லது துவாரகன் ,உங்கள் கவிதை எவ்வளவோ அர்த்தம் நிறைந்ததாய் உள்ளது.நாம் கச்சைகளை இன்னும் அவிழ்க்கவில்லை. அதற்குரிய தேவை வரும்போது அவிழ்க்கத்தான்வேண்டும். கறைகளை கட்டுவதற்காக அல்ல. வாழ்த்துக்கள் .தொடருங்கள்.
    4 hours ago · Unlike · 2

    பதிலளிநீக்கு
  7. வாலாட்டவும் நமக்கு விருப்பமிருக்கிறதே.அப்படியானால் தலையாட்ட வேண்டுந்தானே

    பதிலளிநீக்கு
  8. Yogeswari Sivapragasam; வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மின்னஞ்சலில் சொன்னவை...

    Inbox
    x
    athanas jesurasa

    Nov 3 (4 days ago)

    to me
    நண்பருக்கு,
    வரலாற்று மோசடிகளைப் பற்றிய புரிதல் ஏற்படுகிறது!
    "....தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல...." நாமும்தான் - இம் மோசடிகளை மௌனமாக அங்கீகரித்துக்கொண்டு இருக்கிறோமல்லவா?
    - அ . யேசுராசா


    Kandaya Sothithasan

    Nov 5 (2 days ago)

    to me
    அருமையான கவிதை போலித்தனமான அரசியலையும் அப்பாவிகளையும் சாடுகிறது. நன்றி பகிர்விற்கு.


    chithan prasad

    11:14 AM (19 hours ago)

    to me
    nice dwaragan

    பதிலளிநீக்கு
  10. முகநூல் மற்றும் மின்னஞ்சலில் கருத்துரைத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012