முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?



-துவாரகன்

மூன்று மரக்கம்புகளும்
பிளாஸ்ரிக் விரிப்பும்
கிடைத்தாகி விட்டது
மீளவும் ஒரு கூடாரம் தயார்.

பொதிகளைக் கிளறி
தங்குவோர் பெயரைக் கேட்கும் காவற்காரனே
ஆக மிஞ்சி
எங்களிடம் என்ன இருக்கப் போகிறது?

தண்ணீர் பிடித்துக் கொள்ள
ஒரு பிளாஸ்ரிக் குடுவை
பிள்ளைகளோடு படுத்துறங்க
இரண்டு பாய்கள்
அலுமினியப் பாத்திரங்களோடு கோப்பைகள்
கூடவே துணிமூடைகள்

இளைய பிள்ளையின் வயிற்றுப் பகுதியில்
சிவப்புக் கொப்புளங்கள் தெரிகின்றன
மூத்த பிள்ளையின் முகமெல்லாம் வீங்கி வடிகிறது
காய்ந்து போன விழிகளோடு
பார்த்துக் கொண்டிருக்கிறாள் மனைவி

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களெனில்
இந்தக் கூடாரத்தை விட்டு
எங்கள் வீட்டுக்குப் போகக் கூடும்.
இல்லையெனில்
என் பிள்ளைக்கும்
பிள்ளையின் பிள்ளைக்கும்
இதுவே முதுசமாகலாம்.

வயிற்றோட்டமும் சளியும்
பிள்ளைகளின் பரம்பரைச் சொத்தாகலாம்
வெடித்துச் செதிலாகிப் போன
என் கால்களையும் கைகளையும்
நான் சொறிந்து கொண்டிருக்கலாம்
என் அழகான மனைவி
கால்கள் சூம்பி
மூப்பும் பிணியும் கொண்ட மூதாட்டியாகலாம்
நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?

கனவான்களும் ஆட்சியாளர்களும்
கோட்டுடன் கோவைகளைச் சுமந்து கொண்டு
தம் கழுத்துப் பட்டியை இறுக்கியபடி
விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வாழ்வை எங்களிடம் தருவதற்காக

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?
020520100145

கருத்துகள்

  1. கவிதை மிக நன்றாக வந்துள்ளது. உண்மையில் எமது இனத்தை ஒரு சாபம் தொடர்ந்தபடியே இருக்கிறது... எமது அதிஸ்டம் பற்றிய எண்ணங்களில் வந்துவிட்ட அபத்தமும் வாழ்வில் அவர்களின் துயரும் நெஞ்சைப் பிழிவன. சிலர் ஏதோ தமக்கு இல்லைத் தானே என்று ஓடிக் காண்டிருக்கிறார்கள். உண்மையில் துவாரகன் உங்கள் சமூக அக்கறையும் கவிதையும் மிகவும் சிறப்பானது.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் துவாரகன்

    கவிதை எங்கள் வாழ்வுச் சூழலை நேர்த்தியாக பேசுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்குரிய கவிதை ஒன்றை எழுதியிருக்கிறீர்கள்.

    "நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களெனில்
    இந்தக் கூடாரத்தை விட்டு
    எங்கள் வீட்டுக்குப் போகக் கூடும்.
    இல்லையெனில்
    என் பிள்ளைக்கும்
    பிள்ளையின் பிள்ளைக்கும்
    இதுவே முதுசமாகலாம்."

    உங்கள் கவிதைகளுக்குரிய வலியினால் எழும் எரிச்சலும் வெறுமையும் கவிதையின் முக்கிய சாத்தியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்களை எழுதிய நண்பர்கள் அஐந்தகுமார்> தீபச்செல்வன் ஆகியோருக்கு நன்றி. எழுதி என்னத்தைத்தான் சாதிப்பது? ஆனாலும் எழுதாமலிருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. "கனவான்களும் ஆட்சியாளர்களும்
    கோட்டுடன் கோவைகளைச் சுமந்து கொண்டு
    தம் கழுத்துப் பட்டியை இறுக்கியபடி"

    இது மாறும் காலம் வருமா?
    மாற்ற எமக்கு வலிமை வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...