டிசம்பர் 04, 2023
களவாடப்பட்ட நினைவுகள்
நவம்பர் 14, 2023
மறைந்திருக்கும் பறவைகள்
துவாரகனின் இரண்டு கவிதைகள்
1.
அறுவடைக் காலம்
- துவாரகன்
விதைக்கும்போது
நல்விதை தேடிவிதை
என்றார் அப்பு.
ஒரு பூசணி விதையெனினும்
முற்றிய நல்விதை
சாம்பல் சேர்த்து
அடுப்பு முகட்டில்
பொட்டலமாய்த் தொங்க விட்டார்.
மதர்த்து பூத்து
காய்த்துக் குலுங்கின
நல் விதைகள்.
எங்கள் காலத்திலும்
விதைகள் கிடைத்தன.
பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்!
அறுவடை செய்கிறோம்
புற்களும் களைகளும்.
2.
நிறைகுடம்
- துவாரகன்
அதிகம் பேசாதே
சிரித்துக் கதைக்காதே
எப்போதும்
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்
அறிவாளி.
மலைமேல் எதுவுமில்லை
எனினும்
மழை பெய்கிறது
நிறைகுடமாயிரு
புத்திசாலி.
குறைகுடம்கூடத் தளம்பாது
யாருக்குத் தெரியப்போகிறது
தளம்பாது இரு
நீயும் நிறைகுடம்.
நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ்
சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்
எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும்.
பூதங்களை அடைத்துவைக்கத் தெரியாத மந்திரவாதிகள்
ஜூன் 03, 2023
இது யாருடைய வீடு