முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

துவாரகன் அ யற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக… காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு. அன்றிலிருந்து அவரின் துரைத்தனக் கனவு நிறைவேறியது. இனி நினைவில் இருந்த இரண்டுவரிக் கவிதைகூட அவருக்குத் தேவைப்படாது. அவர் துரை. puthu.thinnai.com