நவம்பர் 14, 2023

மறைந்திருக்கும் பறவைகள்

 


-துவாரகன்

வரிசை குலையாத அழகு.
காற்றோடு கலந்த சுகந்தம்.
புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை.
பந்தற்கால் அருகே
நிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி.
சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!
எந்தப் பறவையென்று தெரியவில்லை.
கைப்பிடி, இருக்கை, கைப்பை
அத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
மிக இரகசியமாக,
அழுக்கைத் தெளிப்பதற்காகவே
காத்திருக்கின்றன
பறவைகளும்.
மனிதர்கள்போலவே!
18092023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக