மே 09, 2021

நாற்றத்தின் கொண்டாட்டம்

    













         துவாரகன்

 

ஒரு பூனையின் கால்களுக்கிடையே

அகப்பட்ட சுண்டெலியின்

ஈனமான கீச்சிடல்

காதில் ஒலிக்கிறது.

 

வருந்தி உழைப்பதும்

விற்றுப் பிழைப்பதும் ஒன்றென

உன் மாயக்கண்ணாடி அறிவு

உனக்குச் சொல்லியிருக்கலாம்.

 

மலக்குழி வெடிப்பினூடாக

வெளியேறும் நாற்றம்போல்

நடந்து வந்த பாதை.

இனி நறுமணத்தைப் பூசிக்கொண்டே

நாங்கள் உரையாடவேண்டியிருக்கிறது.

 

நாற்றம் உனக்கானது.

உன்னோடு வாழக்கூடியது.

எதிர்காலமும் நாற்றத்தையே

புனிதமாகக் கட்டமைக்கும்.

அப்போதும் உன்பாடு கொண்டாட்டம்தான்.

தீம்புனல் 2021.05.08