ஜூன் 21, 2021

மிட்டாய் வியாபாரியின் குதிரையேற்றம்

 

துவாரகன்

 

புதிய குதிரையில் சிட்டாய்ப் பறந்த

மிட்டாய் வியாபாரி

உடம்பெல்லாம் சிரிப்பாக நின்றான்.

 

மிட்டாய்ச் சுவைக்கு மயங்கி

குதிரை கொடுத்தவன்

குத்திட்ட மயிர்த்துளைகளுடன்

குதித்துக் கொண்டிருந்தான்.

 

பேரத்தின் இறுதியில்

கடையும் குதிரையும் கைமாறின.

 

ஒருநாள் குதிரை திரும்பியே விட்டது.               

கையறுநிலையில் கடைக்காரன்.

 

சாபம்பெற்ற இந்திரனின் கண்களை

மிட்டாய்க் காரனும் குதிரைக்காரனும்

இனிப்பாலும் சிரிப்பாலும் மூடியபடி

கடந்து கொண்டிருக்கின்றனர்.

2021

ஜூன் 18, 2021

வெள்ளெலிகளுடன் வாழ்தல் பற்றி


எனது கவிதையான "வெள்ளெலிகளுடன் வாழ்தல்" தொடர்பான இரசனைக் குறிப்பை மா. பா. மகாலிங்கசிவம் அவர்கள் எழுதியுள்ளார். தெளிவாக நூலகம் இணைப்பில் வாசிக்கலாம். வெள்ளெலிகளுடன் வாழ்தல் - துவாரகன் கவிதை

நன்றி : உதயன் மற்றும் மா. பா. மகாலிங்கசிவம் 


ஜூன் 04, 2021

குருகுலம் மாணவருக்கான கல்வி நிகழ்ச்சியில்

 குருகுலம் மாணவருக்கான கல்வி நிகழ்ச்சியில்  (ரூபவாகினி  & ஐ அலைவரிசை) எனது மூன்றாவது காணொளி https://www.youtube.com/watch?v=SyjC0EtV0m0&t=368s


முன்னைய காணொளிகள் 

தரம் 6 குறும்பா

தரம் 9 சகுந்தலை



வ. அ. இராசரத்தினம் படைப்புகள் மீதான உரை

 

தொடர்புடைய காணொளி 

https://www.facebook.com/100000000176167/videos/4355903544419608/

வெளியார் பாடல்

துவாரகன் 



ஐயா தர்மவான்களே!

நாங்கள் தினமும் காலையில் நீராடுகிறோம். 

மூன்று வேளையும் கைகால் அலம்புகிறோம். 

கைநகங்களையும் சுத்தமாக்கி வைத்திருக்கிறோம். 

காலையில் உங்களைப் போலத்தான் குந்தி எழும்புகிறோம்.

தினமும் உடைகளை மாற்றுகிறோம்.

மூன்று வேளையும் உண்கிறோம். 

நீராகாரமும் பருகுகிறோம். 

வீதியிலும் கைகளை வீசி 

இரண்டு கால்களாலும் நடக்கிறோம். 

நீங்கள் சுவாசிக்கும் காற்றைத்தான் 

நாங்களும் சுவாசிக்கிறோம்.

வைத்தியரும்கூட எங்கள் உடலில் ஓடுவது 

சிவப்பு இரத்தம் என்றுதான் சொன்னார். 

அப்படியிருக்கும்போது…

நாங்களும் மனிதர்கள்தானே!

நன்றி : கனவு 2021