- துவாரகன்
இந்தக் காலத்திற்கு
என்னதான் அவசரமோ?
சுழலும் வேகத்தில்
இழுத்து நடுவீதியில்
வீசிவிட்டுப் போகிறது.
என் வீட்டு நாய்க்குட்டிகள்
கண்மடல் திறந்ததும்
மல்லிகை மணம்வீசி
மனத்தை நிறைத்ததும்
சிட்டுக் குருவி வந்து
முற்றத்தில் மேய்ந்ததும்
நேற்றுத்தான் போலிருக்கிறது.
வெளிகளில் இறக்கைகட்டிப்
பறக்கலாம் என்றீர்கள்.
இப்போ,
பிணங்களை வெளியே
கொண்டுவாருங்கள்
என்றல்லவா அழைக்கிறார்கள்.
21092021

கருத்துகள்
கருத்துரையிடுக