மார்ச் 03, 2014

நாங்கள் மனிதர்?




- துவாரகன்

எத்தனை மனிதர்
எத்தனை முகம்
எத்தனை குணம்
எத்தனை குரூரம்

ஒரு பொம்மையைக்கூட...
கைவேறு கால்வேறு கழற்றிப்போட
மனம் பதறுகிறது.

ஒரு சைக்கிளைக்
கழற்றிப் போட்டதேபோல்
மனிதர்களைச் சிதைத்துவிடும் குரூரத்தை
எங்களுக்கு யார் கற்றுத் தந்தார்?

விடிகாலை,
மண்வெட்டி தோளில் சாய்த்து
மண்ணைப் பொன்னாக்கிய
மனிதர் நாம்.
இன்று
மனிதர்களைப் பிளந்து கொண்டிருக்கிறோம்.
03/2014