மார்ச் 07, 2012

எங்களுக்கு விசர்பிடித்ததென்று அங்கீகரியுங்கள்


-துவாரகன்

நீங்கள் எப்போதாவது
விசர்நாயைக் கண்டதுண்டா?

உடல் இளைத்து
நாக்குநீட்டி உமிழ்நீர் வடித்து
தூங்கி விழுந்த வாலுடன்
வீதியெல்லாம் அலையும்

வேட்டைப்பல் காட்டி
வெறித்துப்பார்க்கும் குரைக்காது
கண்டதெல்லாம் கடிக்கும்.
அந்த விசர் எங்களுக்கும் பிடித்ததென்று
அங்கீகரியுங்கள்

குழந்தைக்கும் குமரிக்கும்
குறியொன்று இருக்குதென்று
குண்டிதட்டிச் சொன்னான் ஒருவன்.
அப்போதிருந்து அலைகிறது
வீதியெங்கும் விசர்

விசர்… குத்தும் கிழிக்கும்
கூடிச் சிதைக்கும்
கொல்லும்
இன்னும் என்னவெல்லாம் செய்யும்

நாங்கள் ஒவ்வொருவரும்
விசர்களுக்கு
தீனிபோட்டு வளர்க்கிறோம்.
விசராக்கியவன்
கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு
தன்னைத்தானே
குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.
03/2012
நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாழ் ஓசை

10 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.தொடர்ந்து வாசிக்கின்ற போது ஏற்படுகின்ற உணர்வு அளப்பரியது.தங்களின் பல கவிதைகளை வாசித்தும் உள்ளேன்.கவிதைக்கான களம்/அதன் தேர்வு,வடிவமைப்பு உண்மையிலேயே இரசிக்க்றேன்.
    நல்லதொரு கவிஞனை இனந்காட்டிஉள்ளது.
    வாழ்த்துக்கள்!
    முல்லைஅமுதன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முல்லை அமுதன்

    பதிலளிநீக்கு
  3. கவிதை வரிகளும் அழுகு
    வரிகளுக்கிடையே ....
    சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. பேஸ்புக் நண்பரிடமிருந்து...

    இடுகாட்டான் இதயமுள்ளவன் அந்த விசர் எங்களுக்கும் பிடித்ததென்று
    அங்கீகரியுங்கள் ????????????????
    Yesterday at 06:15 · Like

    பதிலளிநீக்கு
  5. nazza kavithai,neenda vasippin pin nenju kanakkirathu.vaazthukkaz.



    March 09, 2012 5:19 AM அன்று வல்லைவெளி இல் sutharmamaharajan ஆல் உள்ளிடப்பட்டது

    பதிலளிநீக்கு
  6. ”நாங்கள் ஒவ்வொருவரும்
    விசர்களுக்கு
    தீனிபோட்டு வளர்க்கிறோம்.
    விசராக்கியவன்
    கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு
    தன்னைத்தானே
    குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

    வெளியே வேடிக்கையும் உள்ளே வேதனையும்
    கொண்டு நிற்கிற வித்தியாசமான கவிதை.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தீபிகா.

      நீக்கு
  7. விசரை மாற்றும் மருத்துவரும் உண்டே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோகேஸ்வரி சிவப்பிகாசம், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு