நவம்பர் 07, 2011

என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி




-துவாரகன்

நகரச் சந்துகளில்
கூவிக்கூவி விற்ற
கடலை வியாபாரி
ஒருநாள்
என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான்

மழை பெய்து ஓய்ந்திருந்த
மாலைப்பொழுதில்
சிறுவர்கள் மாபிள் அடித்து
விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் கோவிலில்
கடவுளைக் கண்டு
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் மூச்சிலும்
சிறுவர்களின் பேச்சிலும்
ஊர் உயிர்த்திருந்தபோது
ஊரின் ஒதுக்குப் புறத்தால்
வந்துபோனான் கடலை வியாபாரி

கடவுளைத் தூக்கி
வீதியுலாச் செல்ல
இளைஞர்களைத் தேடியபோது
அவர்கள்
யாருக்கும் தெரியாமல்
கடலை கொறித்துக் கொண்டிருந்தனர்.

அழகான கிராமத்தின்
குச்சொழுங்கைகள் எல்லாம்
அசிங்கமாயின
பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால்.
11/2011
நன்றி - பதிவுகள்,tamilauthors

9 கருத்துகள்:

  1. அருமையான படைப்பு.
    "..கடவுளைக் கண்டு
    ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தவர்.."
    மறைந்த மாயம் என்ன?

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  3. அர்த்தம் நிறைந்த கவிவரிகள். ஆழமான கருத்து- நாகரிகம் கருதி பெண்பாலை ஆண்பாலாக கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் , அதை தவிர்த்து பொதுப்பாலில் குறிப்பிட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி
    Dr Sabesan Thangathurai

    பதிலளிநீக்கு
  4. Dr Sabesan Thangathurai மற்றும் நண்பர் ம.தி. சுதா: வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. முகநூல் பதிவுகளில் இருந்து....

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
    அருமையான படைப்பு.
    பகிர்ந்துண்டவர்கள் பலர்
    பகிர்வு நட்பினால் நெருக்கமும் ஆகலாம்.
    எச்சத்தினால் அசிங்கமும் ஆகலாம்.

    வல்லைவெளி: என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி
    vallaivelie.blogspot.com
    Like · · Share · 6 hours ago ·
    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan and 3 others like this.

    Vivekananthan Purushothman ‎//அழகான கிராமத்தின்
    குச்சொழுங்கைகள் எல்லாம்
    அசிங்கமாயின
    பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால். // super
    6 hours ago · Like · 1

    பதிலளிநீக்கு
  6. முகநூலில் இருந்து மேலும்....

    Kannan Sandralingam அழகான எளிய கவிதை
    Yesterday at 10:23 · Unlike · 2

    Thevarasa Mukunthan கவிதை அருமை. நீங்கள் குறிப்பிடுபவை பல பரிமாணங்களை எடுக்கின்றன. தட்டையாக வாசிக்கும் போது ஒரு அர்த்தத்தையும் ஆழ வாசிக்கும் போது கவிதை பிறிதொரு அர்த்தத்தையும் தருகின்றது. வாழ்த்துக்கள் துவாரகன்!
    8 hours ago · Unlike · 1

    பதிலளிநீக்கு
  7. nazza kavithi,paza vithamana ennangazai thoondichsezgirathu.vaazthukkaz.

    பதிலளிநீக்கு