செப்டம்பர் 17, 2011

கிழித்துப்போடு





-துவாரகன்

ண்டைக்குள் குறவணன் புழு
நரம்புகளுள் கொழுக்கிப்புழு
வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம்
உடலெங்கும் ஊனம்

இன்னும்
பேசிப்பேசியே வாசனை பூசு

கவச குண்டலம்
பந்தியில் பறிபோனது
காண்டீபம்
திருவிழாவில் தொலைந்து போனது
சாரதியும்
தேரோடு செத்துப்போனான்

இந்த அழகிய உலகில்
அழுகிய மனிதர்களோடு
இன்னமும் வாழ்கிறேன்
என்று உன் வரலாற்றில் எழுது.
இல்லையெனில்
இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு!
2011/09

7 கருத்துகள்:

  1. பேஸ்புக் பதிவிலிருந்து....

    18 SeptemberSubramaniam Kuneswaran
    மண்டைக்குள் குறவணன் புழு
    நரம்புகளுள் கொழுக்கிப்புழு
    வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம்
    உடலெங்கும் ஊனம்

    வல்லைவெளி: கிழித்துப்போடு
    vallaivelie.blogspot.com
    Share

    18 SeptemberMullai Amuthan
    kavithai nantru.vaazhuthukkal

    18 SeptemberSubramaniam Kuneswaran
    நன்றி அமுதன்

    19 SeptemberDr.Muttiah Kathiravetpillai Muruganandan
    அருமையாக இருக்கிறது.

    19 SeptemberVathiri C Raveendran
    fine.

    பதிலளிநீக்கு
  2. ike · · Share · 18 September at 00:08
    Thevarasa Mukunthan and Mohammed Rizy like this.
    இன்னும் பேஸ்புக்கில் இருந்து...

    Ponniah Karunaharamoorthy இந்த வசை யாருக்காம்................?
    Tuesday at 06:01 · Like

    Subramaniam Kuneswaran இன்னமும் மக்களை ஏமாளியாக்குவர்களுக்கு.
    2 seconds ago · Like

    பதிலளிநீக்கு
  3. அருமை, follow gadget இணைக்கவும்

    பதிலளிநீக்கு
  4. கவி அழகன்,suryajeeva நண்பர்களின் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வார்ப்பு.கொம் இல்இருந்து....

    வாசகர்களின் கருத்துக்கள்
    பெயர்
    ஜதி நாடு India
    தளம்
    திகதி 2011-10-03
    [1]
    பிரமிக்கவைக்கின்றது.
    -ஜதி
    http://www.vaarppu.com/view.php?poem_id=2536&comments=y#comments

    பதிலளிநீக்கு
  6. இனிய வணக்கம் துவாரகன் அண்ணா,
    ஆக்ரோஷம் மிக்க வரிகளிற்கூடாக, வாழும் கவிதைகளிற்கான வீரியத்தைச் சொல்லி நிற்கிறது மேற்படி வரிகள்.

    உங்கள் வலைப் பதிவினை நேற்றைய தினம் என் பதிவினூடாக அறிமுகம் செய்யச் சந்தரப்பம் கிடைத்ததையிட்டு அகம் மகிழ்கிறேன்.

    உங்கள் ப்ளாக்கிற்கு பாலோவர் ஹட்ஜெட் அட் பண்ணலாமே?

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன்.

    பதிலளிநீக்கு