டிசம்பர் 13, 2010

காடு



-துவாரகன்-

அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து
வைத்திருக்கும் அழகிய உலகம்

பொய்யும் கபடமும்
இந்தக் காடுகளிடம் இல்லை
சிறகுவிரித்து நுழைய நுழைய
தன் கரம் நீட்டிக் காப்பாற்றும்.

இயற்கையிலும் வாழ்க்கையிலும்
மோகம் கொண்ட மனிதன்
காடுகளைக் கண்டடைந்தான்.
பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு
ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு
உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு

காடுகளில்தான் மனிதன்
வேட்டையாடக் கற்றுக் கொண்டான்
காடுகளில்தான் மனிதன்
போராடக் கற்றுக் கொண்டான்
காடுகளில் இருந்துதான்
மனிதன் நாடுகளைப் பிடித்தான்.
வீரர்களைக் காக்கும்
விரிந்த உலகானது காடு.

நாகரீக மனிதனோ,
காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான்.
காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான்.

ஆனாலும், காடுகளே அற்புதங்கள்
காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள்
காடுகளே விடுதலையின் வெற்றிகள்
051220100655

10 கருத்துகள்:

  1. நாம் தவறிப் போன உலகத்தை எடுத்துக் காட்டியது கவிதை!! அருமை!!

    நட்புடன்...
    "நந்தலாலா" இணைய இதழ்,
    nanthalaalaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்!!

    நட்புடன்...
    "நந்தலாலா" இணைய இதழ்,
    nanthalaalaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. முல்லை அமுதன் அவர்களுக்கும். 'நந்தலாலா' வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் வாழ்க்கையில் இந்தக்காடுதான் நிறைந்திருக்கிறது...
    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  5. "காடுகளே அற்புதங்கள்
    காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள்
    காடுகளே விடுதலையின் வெற்றிகள்.."
    மிக அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  6. ஒரு மாலைப்பொழுது நண்பர்களுடன் காட்டினூடாகப் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டபோது எழுந்த கவிதை.

    மயூரரூபனுக்கும் டொக்டருக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. வன்னிக்காடுகள்
    திருகோணமலைக்காடுகள்
    தமிழ்நாட்டுக்காடுகள்
    வட இந்தியக்காடுகள்
    மலேசியக்காடுகள்
    ஐரோப்பியக்காடுகள்
    என ஒவ்வொன்றும் ஒருவிதம்.
    அந்த இயற்கை தந்த அற்புதமான
    நினைவுகளை அசைபோடவைத்த
    கவிதைக்கு நன்றிகள்


    நேசமுடன் அம்பலத்தார்

    பதிலளிநீக்கு
  8. காடுகளே விடுதலையின் வெற்றிகள்.
    நிதர்சனமான உண்மை.
    காடுகள் அசுத்தப்படாத நந்தவனங்கள்.
    அமைதியை கற்பிக்கும் பள்ளிக்கூடங்கள்.
    காடுகளில்லா நாடுகள் பாக்கியம் பெறாதவை.
    அருமையான காடு பற்றிய பதிவு. வாழ்த்துக்கள்.

    தீபிகா.

    பதிலளிநீக்கு
  9. அம்பலத்தார், தீபிகா உங்கள் கருத்துக்களுக்கு அன்பு கலந்த நன்றி.

    பதிலளிநீக்கு